Thursday, 25 December 2014

திருவிழா என்றால்.... 
திக்குமுக்காட வைக்கும்....
அது திருவிழா....!
வெளியூர் மக்கள்...
வெளியூரிலிருந்து வந்த உள்ளூர் மக்கள்.... 
மக்கள் கூட்டம்.... மாக்கடலளவு....!
தோழர்கள் கூட்டம், தோழியர் ஆட்டம்.... 
நாட்டியம், நாடகம்... கரகாட்டம், கச்சேரி.... 
எல்லாம் நடக்கும்.....!
பக்தி குறைந்தாலும் 
பாசப்பரவசம் குறையாதது....!
அன்பர் மனதாற விரும்பும்... 
அம்மன் கோயில் திருவிழா.....!
அந்த சாமி.... ஊர்வலம் வருகையில்...
அப்பா தோள் மீது நானிருப்பேன்....!
திருவிழா என்றால்.... அது திருவிழா....!

No comments:

Post a Comment