Thursday, 25 December 2014

எனக்குள் இன்று ....

எனக்குள் இன்று ....
இனிமையாகக் கேட்கிறது...!
எத்தனையோமுறை
நான் கெஞ்சிக்கேட்டு ...
நளின மயிலிறகால்....
என்நெஞ்சம் தொடுமாறு
நீ பாடிய ஒரு பாடல்....!!
அன்றைய அதே அழகுடன்
சின்னதாய்... சிரிக்கிறாய்...!
மவுன மொழியின் காதலியாய் ...
அண்மையில் கிடைத்த நிழற்படத்திலும்....!
பார்க்கும்போதே பாடல் நினைவு...!
இது பரவாயில்லை...
இனி பார்க்காதபோதும் கேட்குமே....!!

No comments:

Post a Comment