Saturday, 27 December 2014

எல்லா நாளும் நல்ல நாளே...
என்று தினம் கூறிடு...
ஆறு நாட்கள் உழைப்பவர்க்கு....
அரிதுதானே... ஞாயிறு...!
நாட்டில்... உடல் உழைப்பவரை...
நாளும் நாமும் மதிக்கணும்...!
ஊதியமும்.... ஓய்வுகளும்....
உரிய அளவு கிடைக்கணும்....!
இன்பம் கெடுத்துத் துன்பமாக்கும்...
இன்னல் தீமை... போக்கிடு....! இது
இரண்டாயிரத்துப் பதினான்கின்
இறுதியான ஞாயிறு...!
மலையில் மகிழும்...
விலை மதிப்பில்லா....
விண்மீன்கள் போல் சில....
துளைகள் வைத்திருந்தேன்....!
மங்கிய நிறத்தில்...
மாலை நேரத்தில்...
மாதவன் அவனொரு....
மூங்கில் கொண்டுவந்தான்....!
இருவரும் இசைந்து...
இசையில் இழைந்து...
இசைக்கடல் கடைந்து ...
மூழ்கி முத்தெடுத்தோம்....
பிறந்தது புல்லாங்குழல்.....!

Friday, 26 December 2014

வரமுடியாதுன்னு சொன்னவங்க
வந்துகிட்டே இருக்காங்க....!
வந்துடுவேன்னு சொன்னவங்க
வராமலே போயிடறாங்க....!

அன்போ, பகையோ....
ஆராதனையோ, அடியுதையோ....
இன்பமோ, துன்பமோ, எதுவோ....
எல்லாமே நிகழ்வது....
இருப்பவர்களைக் கொண்டுதான்....!

Photo: வரமுடியாதுன்னு சொன்னவங்க 
வந்துகிட்டே இருக்காங்க....!
வந்துடுவேன்னு சொன்னவங்க 
வராமலே போயிடறாங்க....!

அன்போ, பகையோ....
ஆராதனையோ, அடியுதையோ....
இன்பமோ, துன்பமோ, எதுவோ....
எல்லாமே நிகழ்வது....
இருப்பவர்களைக் கொண்டுதான்....!
இனிப்பான... பெயர் கொண்ட
கசப்பான... கருத்தாக்கம்...
மீத்தேன்...திட்டம்...!
ஆதிக்கவாதிகளே...
அடங்காதா உம் கொட்டம்...?
வேளாண்மை மடிந்தால்...
புதைக்கவும் இருக்காதே...
புண்ணிய பூமி....!
அறுவடைத் தொழிலின்...
அழகிய கழுத்து
அறுபடும் அவலம் கேட்கிறதா....?
அழகு...
நண்பர்கள் கேட்பார்கள்
நகைக்கவோ.... பாராட்டவோ....
முக அழகின் காரணத்தை ....!
" என்ன க்ரீம் போடுறீங்க.... ?
என்ன பவுடர் ...? என்ன சோப்பு...?
தினமும் ஃபேஷியலா....?
பன்னீரில் முகம் கழுவலா ...?"
இப்படிப் பலப்பல இனிய வினாக்கள்....!
எப்படி நான் விடை சொல்வேன்....
என் ஐந்து வயது வரை 
அம்மா நீ கொடுத்த ....
தாய்ப்பால் குறித்து.....!


"வரதட்சணை... கொடுமை...!"
வாய்கிழியப் பேச்சு ...
மகள் திருமணத்தில் மட்டும்....!




விமரிசனம்
===========
எப்படி இருந்த எழிலரசி ....
இப்படி மாறிப்போனாள் ...
இரண்டு குழந்தைகள் பெற்று .......!

சுய விமரிசனம்
===============
"எப்படி நீங்கள் அப்படியே...?
இருபது ஆண்டுகளுக்கு முன் ...
இருந்தது போலவே....!"
=======================
எப்படிச்சொல்வேன் .....?
அன்று நான்--- நானாக வாழ்ந்ததும்
இன்று நான், நானாக நடிப்பதும்...!

நிதர்சனம்
#=========#
நடிப்பதுகூட
வாய்க்கவில்லையோ...
எழிலரசிகளுக்கு....?
எத்தகு நிலவை ரசிப்பீர் ... 

எத்தகு நிலவை ரசிப்பீர் ...
என்றேன்...!
முழு நிலவு என்றார் ...
முப்பது பேர்...!

பிறை நிலவு என்றார் .... 
பத்து பேர்....!

அரை நிலவு என்றார் ....
ஐந்து பேர் ....!

ரசிப்பது என்பது உறுதியானபின்...
நிலவு...
எல்லா நாளிலும்...
எழிலல்லவா.......?!


"கண்ணே கண்மணியே...
கனிவான நல்லமுதே....
தாலாட்டி மகிழ்ந்த மனம்...
தவிக்கிறது செல்லமுத்தே...!
கிழிந்த சேலையுடன்...
இழிந்த நிலை எனக்கு...!
உன்ன வந்து பாக்க...ஓயாத ஆசைதான் !
வண்டிச் செலவுக்கும்...
அடகு வைக்க ஒண்ணுமில்ல....!
பால் விலை ஒசந்ததனால்...
தயிர் சோறும் எங்களுக்கு....
ஆடம்பர உணவாகிப் போச்சி ...!
நீயனுப்பும் ரூபாய்க்குக்
காத்திருந்து காத்திருந்து ....
கவலைதான் வருகிறது...!
கடுதாசியும் வரவேயில்ல...!
நீ வந்து எங்க நெல பாத்தா பயப்படுவ...
நல்ல எஞ்சாமி ...
நெசமா நீ வரவேணாம்...!
பணம் அனுப்பு...
உன் படமாவது அனுப்பு...!
பாத்து நெகிழுகிறேன் ...
பாசமான உம்மொகத்த...!"
என்று நான் போனமாசம்
எழுதிய கடுதாசி கெடச்சுதா...?
இதுகூட..
நெனப்பூட்ட அல்ல மகனே...
நெனசசிக் கிட்டிருக்கேன்- றத ...
நெல நாட்ட....!

தொலை தூரத்தில் எங்கோ...
தொடர்வண்டியைத் தொலைத்துவிட்டு...
முந்திக் கொண்டு வருகிறதோ....
முகப்பு விளக்கு....!

Thursday, 25 December 2014

எனக்குள் இன்று ....

எனக்குள் இன்று ....
இனிமையாகக் கேட்கிறது...!
எத்தனையோமுறை
நான் கெஞ்சிக்கேட்டு ...
நளின மயிலிறகால்....
என்நெஞ்சம் தொடுமாறு
நீ பாடிய ஒரு பாடல்....!!
அன்றைய அதே அழகுடன்
சின்னதாய்... சிரிக்கிறாய்...!
மவுன மொழியின் காதலியாய் ...
அண்மையில் கிடைத்த நிழற்படத்திலும்....!
பார்க்கும்போதே பாடல் நினைவு...!
இது பரவாயில்லை...
இனி பார்க்காதபோதும் கேட்குமே....!!

குறைவான ஊதியம்... குதூகல இல்லறம்...
அடுத்த மாதம் வருகிறது...
அன்பு மனைவி பிறந்தநாள்...!
அசத்தலாய்ப் பரிசு தரவேண்டும்...
அடுக்கடுக்காய் வாழ்த்தவேண்டும்...!
மனைவி… என்னைப் பாராட்ட
நானும் சேமிப்பவன் என்பதை நிலை நாட்ட
பணம் சேர்த்த விதம் குறித்து
நயமாய் எடுத்துச் சொன்னேன்...
நடைப் பயிற்சி நண்பரிடம்....!
அப்போதே...
அவசரத் தேவையென்று கடன் கேட்டார்...
பத்தாயிரம்...!
அடுத்தநாளே கொடுத்தேன்...!
ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதுதானே
உயர்ந்த வாழ்க்கை...!
அடுத்த மாதம் அவசியம் கொடுப்பதாய் உறுதிமொழி...!
ஒரு மாதம் கடந்த பின்...
கொடுப்பதாய்க் குறித்திருந்த நாள் வந்தது...
இன்னமும் வரவில்லை கொடுத்த பணம்...!
நாளை சாதனையின் நிரூபணம்...
தங்கமான மனைவிக்குத் தர வேண்டும்...
தங்கத்தில் ஒரு பரிசு...!
தொலைபேச முயன்றேன்... நண்பர் எடுக்கவில்லை...
அடடா இதென்ன தொல்லை...!
அவர் வீட்டுக்குச்சென்று பார்த்தேன்
அங்கில்லை நண்பர்....
அதிக நகையணிந்த அவர் மனைவி சொன்னார்...
அங்காடித் தெருவுக்குச் சென்றாராம்...!
“ எப்போது வருவார் ? “
“ வேலை எல்லாம் முடித்து மாலையில் வருவார் “
“ என்ன வேலை ?“
“ மார்கட்ல வட்டிக்கு விடுறார் “
திரும்பவும் வருவாயா?

அடுத்த முறை ....
இப்படி செய்யாதே.....!
உன்னைப் பார்த்தால் ....
வறுமையின் வாட்டம் தெரிகிறது ...!
சட்டை வேண்டுமா , சாப்பாடு வேண்டுமா....
சளைக்காமல் கேள்....!
காசு வேண்டுமா , கவிதை வேண்டுமா....
கட்டாயம் தருவேன் - கேள்...!
வீட்டார் பார்த்திருந்தால்....
விபரீதம் நடந்திருக்கும்....!
மனிதா உன் அடுத்த காட்சி ....
மருத்துவமனையில் இருந்திருக்கும்....!!
மதிலேறி வந்து மாட்டாதே...
இது என் கனிவான வேண்டுகோள்...!
திரும்பவும் வருவாயா திருடனே....!?


விதைத்த போதே....
விருந்தாகியிருக்கலாம்....
பறவைகளுக்கு....!
கதிரான போதே....
களவாகியிருக்கலாம்....
எலிகளிடம் ....!
அறுத்தபோதோ....
அடித்தெடுத்தபோதோ....
அங்கங்கே விழுந்திருக்கலாம்....!
கடைக்கு வந்தபோதோ....
எடைக்கு வந்தபோதோ....
உலைக்கு வந்தபோதோ....
இலைக்கு வந்தபோதோ...
தவறுதலாகத் தவறியிருக்கலாம்.....!
எல்லாம் தாண்டி எம்மிடம் வந்ததை.....
எப்படி...முடிகிறது.... வீணடிக்க....!?
ஒவ்வொரு தானியத்திலும்.....
அவரவர் பெயராம்.....!
உண்மையாக , உறுதியாக - இனி
உணவை வீணாக்கமாட்டோம் ....!!

எல்லா மலர்களும் இங்குண்டு
எனினும் உன் மலர் எதுவென்று
தேர்ந்து பறித்தால் பயனுண்டு.....!
அழகிய வடிவில் சில இருக்கும்...
அந்தியைப் போல சில சிரிக்கும்....
கண்களில் பதியும் எம்மலர்க்கும்....
கவிதையின் அழகு இனித்திருக்கும்...!
.
இரம்மிய அழகாய் இருந்தாலும்...
ரோஜா எனக்குப் பிடிக்காது....!
மாநிலம் முழுதும் மணந்தாலும்....
மல்லிகை எனக்குப் பிடிக்காது....!
செடியே மணமாய்க் கமழ்ந்தாலும்...
மரிக்கொழுந் தெனக்குப் பிடிக்காது....!
எத்தனைச் சிறப்பாய்ப் பூத்தாலும்...
எல்லாப் பருவமும் பூக்காதே....
அதனால் அவற்றைப் பிடிக்காதே....!
எல்லாக் காலமும் கிடைக்கின்ற
செல்லப் பூவே விரும்புவது....!
நன்னறும் பூவது புரிகிறதா...?
நட்புப் பூவது நம்மவரே...!
ஒவ்வொரு சந்திப்பையும்....
உன்னதமான கவிதையாக்குவாய் ....!
புரியாதது போல் நான்தான் ....
பொய்ப் பொருளுரையைப் ...
புனைந்து கொள்வேன் ...!
நிலவினைத் தொடுவது போன்றுளது...
நினைவுகளால் தொட்டுக் கொள்வது....!
என்னையே உலகமாக ...
எண்ணுவதாக எழுதினாய்...!
புரிந்தது உன் புலமை....
பூப்போன்ற உன்னை......
பூமி போல் சுற்றுதற்கா ....?
திருவிழா என்றால்.... 
திக்குமுக்காட வைக்கும்....
அது திருவிழா....!
வெளியூர் மக்கள்...
வெளியூரிலிருந்து வந்த உள்ளூர் மக்கள்.... 
மக்கள் கூட்டம்.... மாக்கடலளவு....!
தோழர்கள் கூட்டம், தோழியர் ஆட்டம்.... 
நாட்டியம், நாடகம்... கரகாட்டம், கச்சேரி.... 
எல்லாம் நடக்கும்.....!
பக்தி குறைந்தாலும் 
பாசப்பரவசம் குறையாதது....!
அன்பர் மனதாற விரும்பும்... 
அம்மன் கோயில் திருவிழா.....!
அந்த சாமி.... ஊர்வலம் வருகையில்...
அப்பா தோள் மீது நானிருப்பேன்....!
திருவிழா என்றால்.... அது திருவிழா....!

படித்தவன் 

படிச்சி முடிச்சாச்சி... 
படாத பாடு பட்டாச்சி ...!
வேலையத் தேடித்தேடி
வேதனைதான் உருவாச்சி...!


அடுத்த ஊரு வேலைக்கின்னு
அவசரமா போனாக்கா...
ஆளு அதிகமுன்னு
ஆறுவாட்டித் திருப்பிட்டாங்க....!
ஊட்டக் காப்பாத்த
ஊரூரா அலஞ்சாச்சி...
அலஞ்சிக் கெடச்சதுல
அரை வயித்துக் கஞ்சாச்சி .....!
வயித்தக் கழுவிக்கவே
விதவிதமா அழுக்கானோம் ....
விடிவு பொறக்குமுன்னு
வீராப்பா வாழ்ந்திருந்தோம்...!
பட்டணத்து வேலைக்கின்னு
பழனிச்சாமி வரச்சொன்னான்...
பெட்டி,பை,துணியோட ..
ஊட்ட உட்டுப் போனேன்....!
(சேலைக்கி ஓரம் மாரி
சாலைக்கி நடைபாதை...)
சிநேகிதன் தயவுல
சின்னதா கடை விரிச்சேன்....
வாய்நோவ வேபாரம்
வயிறாற சாப்பாடு....!

அப்பிடி இப்பிடின்னு
ஆறுமாசம் ஓடிப்போச்சி....!
நித்தநித்தம் நூறு ரூபா
மொத்தமா ....மீசக்கார மாமாவுக்கு...!
காலரத் தூக்கிவுட்டு
கஜா அண்ணன் வந்தாக்கா....
அவசரமாத் தரவேணும்
அவருக்கொரு அம்பது....!
சங்கத்துக்கு சந்தா....
தங்கறதுக்கு வாடக ...
எல்லாம் போவ ஒன்னும் நிக்கல....!
பாழும் மனசுல
பட்டிமன்றம் தெனந்தோறும்...
போலாமா வேணாமா....
பெத்தவங்க மூஞ்சப் பாக்க....!

கே. பால சந்தர்...
கருப்பு வெள்ளைக் காலம் முதல்...
வெள்ளித் திரையில்...
வாழ்வின் ஆயிரம் வண்ணங்களைக் காட்டிய.....
மழலை நிலவு / பால சந்தர்...
நி – ற – ம - ற் - று .....!
நினைவில் நிறைந்தார்....
நிரந்தரப் படைப்பாளி... நீர்க்குமிழியானார்....!
அதிசய ராகம்... அமைதி கொண்டது....!
புதுப்புது அர்த்தங்கள்...
பூலோக வாழ்வின் அகராதியை விட்டுவிட்டு....
ஆகாயம் போயினவோ....?!
நீடிக்கும் ஐயா நினைவுகள்... நூறாண்டு...!!


தமிழ் கவிதைச் சிறுகதை



முதல்...
பள்ளியிலிருந்து புறப்பட்டோம்...
உற்சாகமான உதகை சுற்றுலா...!
படகுக்குழாம்... 
ஓடமும் துடுப்பும் குளமும் மறந்து விட...
உடனிருந்த நீ மட்டும் ஆழ நினைவுகளில்....!
காலம் கடந்து நினைவுக் கிணற்றைத் 
கவிதை அழகுடன் தூறு வாறுகிறேன்....!

உடன் படித்தோர் அனைவரும் மேல்வகுப்பில்....!
நாம் மட்டும் இரண்டாம் முறையாக அதே வகுப்பில்...
அப்போதுதான் ஒன்றுபட்டோம் ……
அவ்வப்போது பேசிக்கொண்டோம்...!
தொடர்ந்து நான்கு நாட்கள் வரவில்லை நீ வகுப்புக்கு !
என்னவென்று கேட்க யாரும் தொடர்பிலில்லை.....!
பாடக் குறிப்பேடு வாங்குவதாய்ப்
போக்குக்காட்டிக்கொண்டு... 
பொழுது சாய 
முதன்முதலாய் உன் வீடு வந்தேன் முகம் பார்க்க....!
பார்வைப்பாசம் நீ உள்ளிருந்தாய்
பார்க்கமுடியாது என்றார் உன் தாய்...!
உடனே உன் அக்கா வந்தார்; குறிப்பேட்டைத் தந்தார்....
உன்னைப்போலவே புன்னகைத்து....!

விரைவு இரயிலென நாட்கள் கடந்தன....
வகுப்பில் எப்போதாவது தலை நிமிர்ந்தாய்...
என்னைப்பார்க்க மட்டும்...
அதுவும்கூட அதிகநேரம் நீடிக்காது...!

அழகிய வண்ண மின்னலாய்....!

ஆண்டிறுதி...வந்தது.... எனைப்பார்த்து நீயழுதாய்....!
கூடிழந்த குருவிகளாய் வருந்தினோம்....!
கூடியிருந்த நண்பர்களை வருத்தினோம்....!
தேர்வுகள் முடிந்து... கல்லூரி போனபின்பு
நீ வேறு நான் வேறாய்த் திசைகளைத்தேர்ந்தோம்....!
எதிர்பாரா விதமாக எப்போதோ ஒரு முறை .....
உன் பேருந்திலிருந்து நீயும்
என் பேருந்திலிருந்து நானும்....
வார்த்தையற்ற கவிதையாக
விழிகளால் பேசினோம்...!

உனைப்பார்க்க இயலாத நிலையிருந்தாலும்...
பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்
பத்தாம் வகுப்பு நிழற்படத்தில்....!
அப்போதெல்லாம் அலையலையாய் இன்பம்...!
உன்னையும் உன் உன்னத நினைவுகளையும்....
பதமாக வைத்திருந்தேன் பைந்தமிழில் கவிதையாக.....!

சில மாதம் கழித்து என் வீடு நீ வந்தாய்....
சில்லென்று வியந்தேன்...சிலநொடி திகைத்தேன்....!
மனமெல்லாம் மகிழ்வலைகள்...! மின்மினிகள்...!
குழம்பினேன் நான்.... தெளிவுடன் நீ....
எனக்கே எனக்கென ... என் பெயர் எழுதி....
தரை பார்த்துக் கொடுத்தாய் திருமண அழைப்பிதழை....!
அதிலும் அழகாய்த்தான் இருந்தது....
கண்ணா.... உன் கையெழுத்து.....!!