Monday, 9 February 2015

அரிசிச்சோறு ஆடம்பரம் அன்று...!
அம்மா அடிக்கடி சொல்வார் நன்று...
“கூழு குடித்தவர் குண்டு...
களி தின்னவர் கல்லு...
சோறு உண்டவர் சொத்தை...” என்று...!
வகை வகையாய்ப் பழ மொழிகள்...

வறுமையை மறைக்க...!!

Sunday, 1 February 2015

எத்தனை முறையோ பார்த்ததுண்டு...
இவ்வளவு அழகாய் இருந்ததில்லை...!
ஒருமுறை மட்டும் உன்னுடனே....
கடற்கரை நடைநான் பயின்றதனால்....
அத்தனை அழகும் அற்புதமாய்....
அடிமனம் வரையில் ரசிக்கிறதே....!

உன் விழி அசைவுகள் பேசுகையில்...
கடலும் நானும் திகைத்தோமே....
உன் புன்னகை இதழைக் கண்டிடவே....
கடலலை கூட எழுகிறதே.....!
நனையும் காலடிச் சுவடுகளை...

நலமாய் ஆசிர் வதிக்கின்றதே...!
மாடி வீட்டு மல்லிகாம்மாவை
மறக்கவே முடியாது .....
கோமா - கணவரை...
குழந்தை போல் பாவித்து....
நகராமல் நான்காண்டு
பக்கத்திலிருந்தே...
பார்த்துக் கொண்டார்...
போன பொங்கலன்று....
கணவர் காலமானார்....
மல்லிகாம்மாவோ  காவியமானார்....

அன்றே உயிர் துறந்து...!

மாடி வீட்டு மல்லிகாம்மாவை
மறக்கவே முடியாது .....
கோமா - கணவரை...
குழந்தை போல் பாவித்து....
நகராமல் நான்காண்டு
பக்கத்திலிருந்தே...
பார்த்துக் கொண்டார்...
போன பொங்கலன்று....
கணவர் காலமானார்....
மல்லிகாம்மாவோ  காவியமானார்....

அன்றே உயிர் துறந்து...!

கருவறை... தூளி.... தொட்டில்...
பாய்.... மெத்தை.... கட்டில்....
பலவும் கடந்து பாடை ....
இடையில் கிடைத்திடும் மேடை.....
முழங்கப்போகிறாயா....
வழங்கப்போகிறாயா.....?


மறந்துபோன நிகழ்வை
மகிழ்வுடன் நினைவூட்டி
இப்போது வந்து கைகுலுக்கி
மறவாமல் நன்றி சொல்கிறார்...!
எப்போதோ செய்த அவசர உதவி... .
மீண்டும் உயிர் பெறுகிறது...
அவசியமின்றி...!

கவியெனக் காலாற நடந்து
கலையெனப் போகிற போக்கில்
எட்டிப் பார்க்கிறாய்…. எனை என
எளிதாக நினைத்தேன்....!
நீயோ....
சிந்தாமல் சிதறாமல்
சின்னப் புன்னகையால்...
சொல்லாமல் கொள்ளாமல்
கொள்ளையிட்டுச் செல்லுகிறாய்....!
ஆழ்ந்து படித்திருந்த
அற்புதத் தருணத்திலே...
“அய்யோ பாம்”பென்ற
அலறல் வெளிக்கேட்க...
அவசரமாய்ப் பாய்ந்தோடி
அப்பாம்பை நான் பார்த்தேன்...!
கனத்துப் பழுப்பாக
கதவருகே படம்விரிக்க...
“அடித்துப் போடடா“ வென்றே
அறைகூவல் மகனுக்கு...
அவனோ அசையாமல்
அழகாகப் படம் பிடித்தான்....!